பாரஊர்தி விபத்தில் சிக்கி கர்ப்பிணித்தாய் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக டிப்பர் ரக வாகனமொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நிகழும் போது கர்ப்பிணித் தாய் வாகனத்தில் அமர்ந்திருந்தாகவும், வாகனத்தின் தடையினை போடாததனால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
நோர்வூட் பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் சிறிய காயங்கள் மற்றும் அதிர்ச்சி காரணமாகவே கர்ப்பிணிப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 16 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri