ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

Vavuniya President of Sri lanka
By Thileepan Jan 06, 2024 12:27 AM GMT
Report

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், போராட்டத்தினை காணாெளி எடுத்த பெண்ணிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வவுனியாவிற்கு நேற்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்

எதிர்ப்புப் போராட்டம்

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று (05.01.2023) போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா..!

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா..!

நீதிமன்ற கட்டளை

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் | Precedent Visit North Province Protest

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணாெளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

கிளிநொச்சியில் போராட்டம்

மேலும், கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட இருந்த போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நிராகரிக்கப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கானது விசாரணைக்கு நேற்றையதினம் எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் | Precedent Visit North Province Protest

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி பிரதேச செயலகம் பூநகரிக்கோட்டை பூநகரி வன்னி மர முந்திரிகை நிறுவனம் என்பவற்றிற்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, பூநகரி பிரதேச செயலகத்திற்கு வருகைத்தரவுள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கு நீதிமன்ற தடை கோரி 10 பேரின் பெயர்கள் அடங்கிய வகையில் பூநகரி பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது ஜனநாயக உரிமை என்றும் ஜனாதிபதி வருகை தரும் இடத்திலோ ஜனாதிபதிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ சேதம் ஏற்படாதவாறு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று நீதிமன்றம் கட்டளை வழங்கி உள்ளது.

செய்தி - யது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US