யாழில் மாவட்ட ரீதியில் 3ஆவது இடம் பெற்று குணராசா பிரகாசன் சாதனை!
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி 3ஏ சித்திகளை பெற்று குணராசா பிரகாசன் என்ற மாணவன் மாவட்ட ரீதியாக 3ஆவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை இளவாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர்தர கல்வியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
அந்த மாணவன் தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் நினைப்பதுதான் நடக்கும் என்ற ரீதியில் எனது ஆசிரியர் தினமும் வகுப்புக்குள் வந்தவேளை சொல்லுவார், 3ஏ எடுப்போம் என பயிற்சி கொப்பியில் எழுதுங்கள் என்று. நானும் அவ்வாறு தினமும் எழுதுவேன். நான் கற்பதற்கு மிகவும் உகந்த சூழலாக எனது பாடசாலையை தெரிவு செய்தேன்.
அந்தவகையில் பெரும்பாலான கற்றல் நடவடிக்கையை பாடசாலையிலேயே முன்னெடுத்தேன்.
எனது இந்த நிலைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், பாடசாலை சமூகத்தினர், ஆசிரியர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது எதிர்கால இலக்கு ஒரு வங்கி முகாமையாளராக வருவதே. எனவே அதனை நோக்கிய எனது பயணத்தை ஆரம்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri