கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்
புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கான சேவைகளை உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று (28) இடம்பெற்ற மண்முனை பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.
வெள்ள நிலைமைகள்
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம். இதற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். போன்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
மேலும் இங்கு மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப் படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
