காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்: இலங்கை மீது கடும் விமர்சனம்
இலங்கை(Srilanka) கடல் எல்லையில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்தபோது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க, புதுடில்லியில்(NewDelhi) உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் இன்று(28) காலை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகமும், இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய அரசு
கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியாகவும், வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
எனவே, இது தொடர்பாக இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்கனவே உள்ள புரிதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை அருகே உள்ள கடலில் இலங்கை கடற்படையுடன் இன்று அதிகாலை நடந்த மோதலின் போது குறைந்தது இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள்; துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள், மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.“
காயமடைந்த கடற்றொழிலாளர்கள்
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதகர அதிகாரிகள் காயமடைந்த கடற்றொழிலாளர்களை மருத்துவமனையில் சந்தித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், கடல் எல்லைகளை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் படி, கடற்றொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது, ஒரு இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், ஒரு கடற்படை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது, அந்த அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால், இரண்டு கடற்றொழிலாளர்களின் கால்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
