10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.. அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த பிரபு எம்.பி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Government NPP Government
By Rusath Aug 18, 2026 07:36 AM GMT
Report

2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர் தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் நேற்று(17.08.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை காணமுடிகிறது. ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

நீதிபதிகளின் வயது எல்லை அதிகரிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயது எல்லைகளை அதிகரிப்பது தொடர்பான விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக் கொண்டு சிலர் வருகின்றார்கள்.

10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.. அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த பிரபு எம்.பி | Prabhu Mp Responds To Criticism Of The Government

இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும், அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட திட்டம்

2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.. அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த பிரபு எம்.பி | Prabhu Mp Responds To Criticism Of The Government

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால் கூட சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார் என்றார்.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அ.லிங்கேஸ்வரன், திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றிஸ்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்

பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்

அரசியல்வாதிகள் மோசடிகளால் குவித்துள்ள சொத்துக்கள் - நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர்

அரசியல்வாதிகள் மோசடிகளால் குவித்துள்ள சொத்துக்கள் - நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர்

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US