விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை! இறுதியில் என்ன நடந்தது: ஆதாரத்தை வெளியிட்ட சட்டதரணி

Sri Lanka Chennai India Sri Lanka Government
By Chandramathi Feb 14, 2023 05:00 PM GMT
Report

இவ்வளவு நாள் மறைமுகமான வாழ்க்கையை பிரபாகரன் வாழ்ந்தார் என்று சொல்லுவது அவருக்கு அவமரியாதையை உண்டாக்குவதற்கு தானே தவிர நல்ல எண்ணத்தில் இல்லை என சட்டதரணி துரைசாமி தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் மரணம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

பழ.நெடுமாறன் ஏன் பொய் சொன்னார்

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திக்கு பின்னால் இந்தியாவின் உளவுத்துறையும் பாரதி ஜனதா கட்சியின் தலைமையும் சதி செய்துள்ளனர். அந்த சதியின் அடிப்படையில் தான் பிரபாகரன் இப்போது உயிருடன் இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகின்றது.

பாஜக உடன் பழ.நெடுமாறன் விலை போய்விட்டார். அதனுடன் இணைந்துவிட்டார் என்பதே இந்த பொய்யின் அடிப்படை காரணம்.

இவ்வளவு நாள் மறைமுகமான வாழ்க்கையை பிரபாகரன் வாழ்ந்தார் என்று சொல்லுவது அவருக்கு அவமரியாதையை உண்டாக்குவதற்கு தானே தவிர நல்ல எண்ணத்தில் இல்லை. 

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை! இறுதியில் என்ன நடந்தது: ஆதாரத்தை வெளியிட்ட சட்டதரணி | Prabhakaran Alive Today News Advocate Duraisamy

இவ்வளவு நாள் இலங்கை மக்கள் கஷ்டப்படும் போது அவர் எங்கோ சொகுசு வாழ்க்கை வாழமாட்டார். களத்திற்கு வந்திருப்பார்.

இறுதி நாள் யுத்தத்தில் மற்ற தலைவர்கள் எல்லாம் அதாவது பொட்டு அம்மன், அகிலன் எல்லோரும் இறந்த பிறகு நடேசன் தூதுவராக வெள்ளை கொடி ஏந்திக்கொண்டு சென்றவரையும் இலங்கை அரசாங்கம் சுட்டு கொண்டது.

பிரபாகரனின் மகன் விமானத்தில் சென்ற போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அவரும் இறந்துவிட்டார்.   

இதன் பின்னர் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கினார் இதற்கமைய மாவீரர் பிரபாகரன் அவர்கள் 2009.05.18 அன்று வீர மரணம் எய்தினார்.

திராவிட கலக்கத்திற்கு எதிராக பிரபாகரனை வைத்து இந்தியாவின் உளவுத்துறையும் பாரதி ஜனதா கட்சியின் தலைமையும் இன்னும் சில தலைவர்களும் இணைந்து செய்த சதியாகவே நாங்கள் இது பார்க்கின்றோம். மற்றபடி பிரபாகரனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மேலும் அப்போதே அவர் இறக்கவில்லை என பலர் கூறினார்கள். பிரபாகரனை நன்கு அறிந்த யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். அவர் இயற்கையாகவே போர் குணம் நிறைந்த ஒருவர். மறைந்து வாழ வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது.

பிரபாகரன் மீது இரண்டு வழக்குகள்

அந்த காலத்தில் பிரபாகரன் மீது சென்னையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒன்று ராஜூகாந்தி வழக்கு அதில் 26 வது குற்றவாளியாக பிரபாகரன் சேர்க்கப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றில் வழக்கு நடந்தது.   

பிரபாகரனை கைது செய்யும் நடவடிக்கை தோல்வியுற்ற பின்னர் அவரது தளபதி பொட்டம்மன், அகிலா மற்றும் பிரபாகரன் மீதான வழக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை! இறுதியில் என்ன நடந்தது: ஆதாரத்தை வெளியிட்ட சட்டதரணி | Prabhakaran Alive Today News Advocate Duraisamy

அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் வழங்கிய மரண சான்றுதலுக்கமைய அந்த வழக்கு 25.10.2010 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.

இதனை அடிப்படையாக கொண்டு அவர் மீதான வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன.

அவர் மீது தற்போது எந்த வழக்கும் கிடையாது. அவருடைய இறப்பு சான்றிதழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருக்கின்றது அவர் இருக்கிறார் என்பது பொய் பிரச்சாரம்.

1952 இல் இருந்து பாரதி ஜனதா கட்சி இலங்கையர்களுக்கு எதிராக தான் செயற்பட்டது. ராஜூகாந்தி கொலையை மையமாக கொண்டு பலருடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள் இப்போது ஏன் இலங்கைக்கு சென்று வந்தனர்.

இலங்கைக்கு சென்று வந்ததும் இப்படி ஒரு பொய்யான கருத்தை கூறுகிறார்கள்.

பாரதி ஜனதா கட்சி இந்தியாவில் வளர வாய்ப்பில்லை. அதனால் தான் பிரபாகரன் எனும் இந்த ஆயுதத்தை எடுத்து இலங்கையர்களுக்கு ஆதரவளிப்பது போல் காட்டுகிறார்களே தவிர அவர்கள் கூறும் விடயத்தில் எந்த உண்மையும் இல்லை. 

 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US