நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு அவசியம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

Anura Kumara Dissanayaka Suresh Premachandran Government Of Sri Lanka National People's Power - NPP
By Rakesh Nov 18, 2024 10:58 AM GMT
Report

அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதானது இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று நாங்கள் நம்புகின்றோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிரடி மாற்றம்! அநுர நினைத்தாலும் செயற்படுத்த முடியாத சிக்கல்

புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிரடி மாற்றம்! அநுர நினைத்தாலும் செயற்படுத்த முடியாத சிக்கல்

தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவிலான சுமை

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வாக்களித்த 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் வாக்களிப்பில் கலந்து கொண்ட கலந்து கொள்ளாத ஏனைய மக்களுக்கும் எமது நன்றிகள்.

நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு அவசியம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து | Power Sharing Necessary For Reconciliation Suresh

வரலாற்றில் முதன்முறையாக விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குமேல் கொடுத்து ஓர் இடதுசாரி கட்சியை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு எமது வாழ்த்துகள்.

ஆட்சியில் அமர்ந்திருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்திக்குப் பெருமளவிலான சுமை தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது.  

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் வாங்கிய கடன்களை அடைக்கத் தொடங்க வேண்டும்.

நீண்டகாலப் போர் 

உள்நாட்டில் அவர்களை நம்பி வாக்களித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 

நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு அவசியம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து | Power Sharing Necessary For Reconciliation Suresh

இதற்கு மேலதிகமாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவையும் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானவை.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஓர் அதிகாரப் பகிர்வுக்காகப் போராடி வந்திருக்கின்றனர். அதற்காக நீண்டகாலப் போர் ஒன்றும் இந்த மண்ணில் நடைபெற்றது. எந்தவொரு அரசுக்கும் கொடுக்காத ஆதரவை வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்குக் கொடுத்துள்ளனர்.

புதிய அரசு முந்தைய ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் திளைத்ததுபோல் அல்லாமல் தனது கடமைகளையும் பொறுப்பையும் உணர்ந்து சரியான திசைவழியில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

தோல்விக்கான காரணங்களை வெளியிட முடியாது : சஜித் தரப்பு உறுதி

தோல்விக்கான காரணங்களை வெளியிட முடியாது : சஜித் தரப்பு உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US