வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் நாளை மின்தடை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் மின்சார தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் மற்றும் வவுனியா வடக்கு பகுதியினை தவிர்ந்த மாவட்டத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து
தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் வவுனியா
பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
