நாட்டின் பல பகுதிகளில் திடீரென ஏற்பட்ட மின் வெட்டு!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
நாட்டிலுள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே, மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.
எரிபொருள் தட்டுபாடு காரணமாக மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்த முடியாததை அடுத்தே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மின்வெட்டு ஏற்படவில்லையெனவும், எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என உறுதியாக கூற முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 22ம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
