கட்டணம் செலுத்தப்படாமையால் கல்முனை பொதுச் சந்தைக்கான மின் இணைப்பு துண்டிப்பு
மின் கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இணைப்பு இலங்கை மின்சார சபையினால் நேற்றைய தினம் (25) துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளமையினால் இன்று (26) காலை வரை வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மீள வழங்கப்படவுள்ள மின் இணைப்பு
எனினும் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கமும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் உரிய மின்சார நிலுவை கொடுப்பனவு தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின்சார சபையினர் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சீரமைத்து மீள வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்முனை மாநகரசபையின் கீழ் உள்ள குறித்த பொதுச் சந்தைக்கான மின்சார கட்டணத்த செலுத்தும் உத்தியோகத்தர் உரிய காலத்தில் நிதியை செலுத்த தவறிய காரணத்தால் இவ்வாறு மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தனக்கு தொலைபேசி ஊடாக நிலைமையை அறிய தந்ததாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.










பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
