நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம்(29) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மின்வெட்டு நேரம்
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக வலயங்களின் கீழ் (CC)உள்ள பகுதிகளில் இன்று காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையான பகுதியினுள் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.