கடும் சரிவை சந்தித்தது பிரித்தானிய பவுண்ட் - இங்கிலாந்து வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவைப்படும் அளவுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்று இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு நிகராக பிரித்தானிய பவுண்ட் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இங்கிலாந்து வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரித்தானிய பவுண்டின் வீழ்ச்சியானது அமெரிக்க டொலரை ஒரு புதிய இரண்டு தசாப்த கால உச்சத்தை அடைய உதவியது. இதன்படி, பவுண்ட் அதன் பெறுமதியில் 4.9 வீதம் சரிந்ததுடன், டொலரின் பெறுமதி 1.03 ஆக அதிகரித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டங்கள் குறித்து வர்த்தக சந்தைகள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில், பவுண்ட்டின் பெறுமதி சரிவை சந்தித்துள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் 45 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சர்ச்சைக்குரிய வரிக் குறைப்புகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தைகள் மூடப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri