பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமைக்கான வழக்கு ஒத்திவைப்பு(Photos)
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது 2022 யூன் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021, பெப்ரவரி, 03ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்காக பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால், நீதிமன்றத் தடையுத்தரவை மீறிக் கலந்து கொண்டமைக்காக 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கானது இரண்டாவது தவணையாக பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி முனாஸ் மற்றும் சட்டத்தரணி நவம் கமலதாஸ் ஆகியோர் தமது பக்க சமர்ப்பணங்களைச் செய்திருந்தனர்.
பொலிஸாரினால் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டதற்கு அமையத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் இரா.சயனொளிபவன் உள்ளிட்ட சிலர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை 2022 யூன் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
