அரச ஊழியர்களில் ஒரு தரப்பினரின் மேலதிக கொடுப்பனவு சர்ச்சை - ஆரம்பிக்கப்படும் விசாரணை
அஞ்சல் ஊழியர்களில் சிலர் மேலதிக நேர கொடுப்பனவில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அஞ்சல் ஊழியர்களில் ஒரு குழுவினர் முறையற்ற விதத்தில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மேலதிக நேர கொடுப்பனவாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் கடந்த 2025ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முறையான விசாரணை
குறித்த முறைப்பாட்டை பரிசீலித்த பின், அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி.லனெரோல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை விசாரணைகளின் மூலம் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
முறையான விரல் அடையாளப் பதிவு இன்றி பெருமளவிலான ஊழியர்கள் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வாகனப் பராமரிப்பு போன்ற பணிகளின் போது, தேவையற்ற ஊழியர்களின் பெயர்களைப் பட்டியலில் இணைத்தும், வேலை நேரத்தை செயற்கையாக அதிகரித்தும் நிதி கோரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 12 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri