நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Ampara Nuwara Eliya Strike Sri Lanka Postal Strike
By Independent Writer Aug 18, 2025 09:07 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நுவரெலியா மற்றும் நானுஓயாவிலும் தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி (18) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

எனினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இதனால் தபால் நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

செய்தி - செ.திவாகரன்

அம்பாறை

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு! சூடுபிடிக்கும் ரஷ்ய - உக்ரைன் விவகாரம்

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு! சூடுபிடிக்கும் ரஷ்ய - உக்ரைன் விவகாரம்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர். இதற்கமைய இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள் ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

இதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

செய்தி - சிஹான் பாரூக்

ஹட்டன்

தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் உள்ள தபால் நிலையம் உட்பட மலையக பகுதியில் உள்ள சகல தபால் நிலையங்களும் பூட்டு போடப்பட்டிருந்தன.

பாதாள உலக குழுக்கள் இல்லாத வடக்கு மாகாணம்! காரணம் கூறும் அமைச்சர்

பாதாள உலக குழுக்கள் இல்லாத வடக்கு மாகாணம்! காரணம் கூறும் அமைச்சர்

பெருபாலானவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தபால் நிவையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.

19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா

இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி பிரதான தபால் நிலையம் மற்றும் பரந்தன் தபால் நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

தபால் சேவைகளை பெற வந்த மக்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும் உப தபால் நிலையங்கள் தமது கடமைகளை இன்று திறந்திருந்தமை காணக்கூடியவராக இருந்தவை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு | Postal Service Strike In Sri Lanka

நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US