சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் தேசபந்துவுக்கு வாழ்த்து கூறிய பதிவு
கொழும்பு முன்னணி கல்லூரியொன்றின் பழைய மாணவர்கள் சங்கத்தால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக கூறப்படும், போலியான பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அசல் பதிவு சங்கத்தால் பகிரப்பட்டிருந்தது.
மீண்டும் சமூக ஊடகங்களில்
இருப்பினும், தென்னகோன், அண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பதிவின் திரிபுபடுத்தப்பட்ட பதிப்பு மீண்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னைய அசல் செய்தி தவறாக பகிரப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மேலதிக விசாரணைக்காக இணையக் குற்றப் பிரிவுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam