சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் தேசபந்துவுக்கு வாழ்த்து கூறிய பதிவு
கொழும்பு முன்னணி கல்லூரியொன்றின் பழைய மாணவர்கள் சங்கத்தால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக கூறப்படும், போலியான பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அசல் பதிவு சங்கத்தால் பகிரப்பட்டிருந்தது.
மீண்டும் சமூக ஊடகங்களில்
இருப்பினும், தென்னகோன், அண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பதிவின் திரிபுபடுத்தப்பட்ட பதிப்பு மீண்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னைய அசல் செய்தி தவறாக பகிரப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மேலதிக விசாரணைக்காக இணையக் குற்றப் பிரிவுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam