துறைமுக நகர சட்டமூலத்தில் பௌத்த சமயத்திற்கு முதலிடம் இல்லை - சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது சரத்தில் உள்ள பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்பது இல்லாமல் போகும் என சட்டத்தரணி அருண லக்சிறி உணவட்டுன தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி அவர் புத்தசாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த சட்டமூலம் தொடர்பாக எதிர்காலத்தின் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது ஷரத்தை பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.