அரச தரப்புடன் கலந்துரையாடிய கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம்
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port city colombo private limited ) முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் (xiong Hongfeng) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது, இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
புதிய திட்டங்கள்
இதன்போது, கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் சியன் நன்னும் (Xian Nan(Neo) இந்த சந்திப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri