ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் பாப்பரசர்
வத்திக்கானில் ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகளை நடத்த பாப்பரசர் லியோ XIV தயாராக இருப்பதை ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் வரவேற்றுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
புடினுடனான ட்ரம்பின் அழைப்புக்குப் பிறகு, ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் அவருடன் பேசியதாக மெலோனியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான சூழ்நிலைகளை உருவாக்கவும், விரைவில் போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று மெலோனியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வத்திக்கானில் பேச்சுவார்த்தை
இது சம்பந்தமாக, வத்திக்கானில் பேச்சுவார்த்தைகளை நடத்த பரிசுத்த பாப்பரசரின் விருப்பம் நேர்மறையானதாகக் கருதப்பட்டது.

தொடர்புகளை எளிதாக்குவதற்கும் அமைதிக்காக உழைப்பதற்கும் இத்தாலி தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளது, என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வத்திக்கான், பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.
பெரும்பாலும் அமைதிக்கு பாப்பரசர் அழைப்பு விடுக்கும்போது, போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திரத்தில் வத்திக்கான் நேரடியாக ஈடுபடுவது முக்கியத்துவம் மிக்க ஒன்று எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri