புதிய பாப்பரசர் பட்டியலில் இலங்கை கர்தினாலின் பெயர்..!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு பிறகு, புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அடுத்த பாப்பரசருக்கான தெரிவு பெயர் பட்டியலில் இலங்கையின், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன.
குறித்த பதவிக்கு சாத்தியமான கர்தினால்களின் பெயர் தொகுப்பில், வாஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கர்தினால் லூயிஸ் டேகிள், பிரான்சின் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கர்தினால் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான திகதி
சர்வதேச ஆங்கில ஊடகமொன்று பல்வேறு சர்வதேச தளங்களில் பரவலாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அறிக்கையில், கர்தினால்கள் மேட்டியோ ஜூப்பி, கெர்ஹார்ட் முல்லர், ராபர்ட் சாரா மற்றும் ரேமண்ட் பர்க் உள்ளிட்ட உலகளாவிய பட்டியலில் கர்தினால் ரஞ்சித்தையும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், சர்வதேச கத்தோலிக்க செய்தி ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று மல்கம் ரஞ்சித்தின் பழமைவாத இறையியல் கருத்துக்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பிரதிநிதித்துவம் காரணமாக அவர் ஒரு "இருண்ட குதிரை" வேட்பாளராக பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கர்தினால் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வாஷிங்டன் ஊடகம் ஒன்று எடுத்துக்காட்டி, கர்தினால்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியுள்ளது.
அதேவேளை, முன்னணியில் இருப்பவர் யாரும் வெளிவரவில்லை என்றாலும், பல சர்வதேச அறிக்கைகளில் கர்தினால் மல்கம் ரஞ்சித் சேர்க்கப்பட்டிருப்பது, குறிப்பாக ஐரோப்பாவிற்கு வெளியே இருந்து தலைமைத்துவத்தின் மீது கவனம் திரும்பியுள்ள நிலையில், கத்தோலிக்க திருச்சபைக்குள் அவரது நிலைப்பாடு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.
அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறான செய்திகள் பல எதிர்பார்ப்புக்களை தூண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
