பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
3,500 மெட்ரிக் தொன் 'பொன்னி சம்பா' அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உள்ளூர் சந்தையில் தற்போது நிலவும் 'கீரி சம்பா' அரிசிக்கான பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஒக்டோபர் (15) ஆம் திகதி அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
அரிசி இறக்குமதி
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதல் தொகுதி ஒக்டோபர் 23 அன்று நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து 'பொன்னி சம்பா' அரிசியின் மேலும் தொகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam