பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் முன்னெடுப்பு!
பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் பொலிஸார் ,அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அளவுக்கதிகமான பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam