பொலன்னறுவை விபத்தில் இளைஞர் பலி
பொலன்னறுவை - வெலிகந்த, சிங்கபுர வீதியின் முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நிபுன் நிர்மல் புஸ்பகுமார என்ற இருபது வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை
வெலிகந்த நகரிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடது பக்கமாக வந்த எருமை மாட்டைக் காப்பாற்ற முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வலப்புறமாகத் திரும்ப முற்பட்ட போது, மரத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் 19 வயதுடைய சாரதி விபத்திற்குள்ளாகி காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
