இறக்குமதி செய்யப்படும் 25 மோப்ப நாய்கள்:ஒரு நாயின் விலை 10 லட்சம் ரூபாய்
வெடிப் பொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக மோப்ப நாய் குட்டிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் ரகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண் நாய்கள் என 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாய் குட்டியின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்ய உள்ளது.
பொலிஸ் திணைக்களம் கடந்த 2019 ஆம் அண்டுக்கு பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை கொள்வனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண் மற்றும் பெண் நாய்கள் ஊடாக குட்டிகளை பெற்று, அவற்றை பொலிஸ் துறையில் பல பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam