பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகளே பாதுகாக்கின்றனர் : அனுர
பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுவினரை போஷித்து, அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அரசியல்வாதிகளே வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவு
பல ஆண்டுகளாக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதைப் பொருளற்ற மற்றும் குற்றச் செயல்களற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக்குழுவினரும் குற்றவாளிகளும் மீண்டும் நாட்டில் தலைதூக்கத் தொடங்கியுள்ளதோடு, இவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கொள்கையில் ஆட்சி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு உயர் அதிகாரிகள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களில் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri