தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் பெறுமதியை இரட்டிப்பாக காண்பிக்க முயற்சி..!
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, தாக்குதலுக்கு இலக்கான மற்றும் தீக்கிரையான வீடுகளின் சேதப் பெறுமதியை அரசியல்வாதிகள் இரட்டிப்பாக உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி பல அரசியல்வாதிகளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட சேதப் பெறுமதியை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகள்
சேதமடைந்த வீடுகள் போலி சேத மதிப்பீடுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபா பணம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சேதமடைந்த ஒரு வீட்டை இரண்டு வீடுகளாக காண்பித்து மதிப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பதாக அந்த செய்தியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போலி அறிக்கைகள்

சேதமடைந்த தொகைகளை விடவும் கூடுதல் தொகை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு ஐந்து அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீடுகளில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் இருந்ததாகவும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சில அரசியல்வாதிகள் லாபமீட்ட முயற்சிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri