இலங்கையில் ஹொங்கொங் போன்ற நிர்வாக அலகு ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது - விதுர விக்ரமநாயக்க
இலங்கைக்குள் ஹொங்கொங் போன்ற தனியான நிர்வாக அலகை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எந்த முதலீட்டாளர் இலங்கைக்கு வந்தாலும் இலங்கையின் சட்டங்கள் அனைவருக்கும் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் நாட்டின் சட்டமே அமுலில் இருக்க வேண்டும்.
மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், அதன் ஊடாக நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் எனவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.