எதிலும் அரசில் கலந்திருப்பதே சமூகம் அவஸ்தைப்படுவதற்கு காரணம்! - நஸிர் அஹமட்

batticaloa eravur nazeer ahamed srilanka muslium congress
By Rusath Apr 15, 2021 07:16 PM GMT
Report

எங்கும், எதிலும் அரசியல் கலந்திருப்பதே தற்போது நமது சமூகம் அவஸ்தைப்படுவதற்குக் காரணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் இளம் தாரகை விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், ஏறாவூரின் அரசியல் முன்னோடிகளான முன்னாள் விசேட ஆணையாளர் மர்ஹம் எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் வைத்தியர் பரீட் மீராலெப்பை ஆகியோரின் நினைவாகவும் நடாத்தப்பட்ட கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை போட்டியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

நாங்கள் எல்லாவற்றிலும் அரசியலை மாத்திரம் மையமாக வைத்து சமூகத் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். இதுவொரு பாரம்பரியமாக இடம்பெற்று வந்துள்ள நிகழ்வாகும்.

எங்களுடைய சமூக அரசியல் தலைமைகள் இவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக இப்பொழுது ஒட்டுமொத்த சமூகமும் இந்த சிந்தனைக்குள் அகப்பட்டு அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.

இதனைப் புரிந்துகொண்டு எங்களை நாங்கள் கண்ணாடியில் பார்க்க வேண்டியுள்ளது. அரசியலை மையமாக வைத்து அனைத்தையும் அணுகும் அசிங்கமான போக்கை மாற்றியமைக்க வேண்டும்.

தேர்தல் முடிந்த கையோடு அரசியலை விட்டு விடவேண்டும். எல்லாவற்றிலும் அரசியலைக் கலப்பதால் ஆன பயன் ஏதுமில்லை. இது பற்றி ஒட்டு மொத்த சமூகத்திலுள்ள அமைப்புக்களும் தனி நபர்களும் சிந்திக்க வேண்டும்.

சமீபத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுடன் மிக நீண்டநேரம் பேசக் கிடைத்தது. கிழக்கில் இளைஞர்களை எவ்வாறு அணி திரட்டி நாட்டின் தேசிய அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்ய முடியும் என்பது பற்றி விவாதித்தோம்.

விளையாட்டு அமைச்சர் நாமலினால் தற்போது குருநாகலில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை மட்டக்களப்பிலும் நடத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்குத் தான் மட்டக்களப்பில் தங்கியிருந்தாவது அலுவல்களைக் கவனிப்பேன் எனக் கூறியுள்ளார். இவ்வாறான ஒரு அமைச்சர் எங்களுக்குக் கிடைத்துள்ளது மிகப் பொருத்தமான வாய்ப்பாகும் .

ஏறாவூரில் தொழில் இல்லாத இளைஞர்கள், அங்கவீனர்கள், விதவைகள் அதிகம் உள்ளனர். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் அடையாளப்படுத்தப்பட்டுத் தீர்க்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார். .

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US