தமிழர்கள் கையில் வேறு ஆயுதமில்லை! உண்மையை உடைக்கும் சாணக்கியன்(Video)
தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்றால் பேச்சுவார்த்தைக்கு போவதை தவிர எங்களுடைய கைகளில் வேறு ஆயுதங்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,அரசியல் தீர்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும் எமக்கு இரண்டு வழிகள் தான் உள்ளது.
முதலாவது இந்த நாட்டில் எமது மக்களுக்கு எந்த உரிமையும் தேவை இல்லை. சிங்கள மக்கள் சொல்வதையே நாங்கள் கேட்டுக்கொண்டு வாழ்கின்றோம்.
நீங்கள் நினைத்தபடி விகாரை அமையுங்கள். காணிகளை அபகரித்து, யாரை வேண்டுமானாலும் குடியேற்றுங்கள். நாங்கள் தெற்கில் வாழும் தமிழர்கள் போன்று சிறுபான்மையாக வாழ்கின்றோம் என்று எது நடந்தாலும் ஏற்றுக்கொள்வது.
இரண்டாவது வடக்கு கிழக்கில் நாங்கள் கௌரவமாக வாழ்ந்த இடங்களை நாங்களே ஆட்சி செய்வது. இந்த விடயத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மேலும் இதற்கான சர்வதேச ஆதரவை நாங்கள் திரட்டுவது. இவ்வாறு பேச்சுவார்த்தைக்கு போவதை தவிர எங்கள் கைகளில் வேறு ஆயுதங்கள் இல்லை என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |