அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கைகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
கடந்த 16ம் திகதி இது குறித்த அறிவிப்பினை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற தகுதியை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு 1ம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் இவ்வாறு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.