நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Steephen Jul 03, 2022 11:30 AM GMT
Report

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது என ஆரம்பத்திலேயே கூறியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவிக்கு வந்த உடன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை நியமித்ததும் அரசாங்கத்தின் இருப்புக்கு தடையாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்ககளத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.

அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று எதிர்வுகூறினேன்

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச | Political Crisis Peoples Protest

கம்மன்பில உட்பட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று மேற்கொண்ட போராட்டத்தின் பிரதிபலனாக அன்று எதிர்க்கட்சிக்கு செய்ய முடியாததை செய்ய முடிந்தது.

அத்துடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று நாங்கள் எதிர்வுகூறியிருந்தோம்.

மிகப் பெரிய யுத்தத்தில் வென்றதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது.

18வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் முடிந்தது.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே 20வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்காது என்று நாங்கள் கூறினோம்.

நாங்கள் கூறியது போலவே நடந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் அரசாங்கம் பதவியில் இருக்காது என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நேரடி ஊடக சந்திப்பொன்றில் கூறினேன்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசாங்கத்திற்கு பொருளாதார முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது. மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் இல்லாமல் போகும்.

மக்கள் வீதியில் இறங்குவார்கள். பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மக்கள் மிகவும் ஆத்திரமடைவார்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் நாடாளுமன்றத்தை கொண்டு நடத்த முடியாமல் போகும் என்று அப்போதே கூறினேன். ஏழு மாதங்களுக்கு இதனை கூறினேன்.

மக்கள் வீதியில் இறங்குவார் என்று அறிந்தே நான் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்தேன்.

அது அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டது. எனினும் அந்த யோசனையை ஆளும் கட்சியை போல், எதிர்க்கட்சியும் நிராகரித்தது. இதற்கிடையில் மக்கள் வீதியில் இறங்கியதால்,பிரச்சினையின் பாரதூரமான தன்மையை அனைவரும் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

எதிர்க்கட்சிகள் நிராகரித்ததால் ரணில் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச | Political Crisis Peoples Protest

இது சம்பந்தமாக மூன்று வாரங்கள், அனைத்து கட்சிகளுடனும் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடினோம். பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வந்தால், ஒப்படைப்பீர்களா என்று நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஜனாதிபதி அதற்கு இணங்கினார். ராஜபக்ச குடும்பத்தினரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு நடத்தினோம், ஜனாதிபதி அதற்கு இணங்கினார்.

பிரதமரை நீக்கவும் ஜனாதிபதி இணங்கினார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேலைத்திட்டம் இருந்தால், நான் பிரதமரை நீக்க தயாராக இருக்கின்றேன் என ஜனாதிபதி கூறினார்.

பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். மூன்று வாரங்கள் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை.

சகல கோரிக்கைகளையும் எதிர்க்கட்சி நிராகரித்ததால், இதனால், பிரதமர் பதவியை ஒருவருக்கு கொடுத்து அரசாங்கத்தை அமையுங்கள் என்று எமக்கு ஜனாதிபதியிடம் கூற நேரிட்டது.

இதனடிப்படையில் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்த போது, நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால், பிரதமர் பதவியை ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என ரணில் விக்ரமசிங்க கூறினார் எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US