நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Steephen Jul 03, 2022 11:30 AM GMT
Report

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது என ஆரம்பத்திலேயே கூறியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவிக்கு வந்த உடன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை நியமித்ததும் அரசாங்கத்தின் இருப்புக்கு தடையாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்ககளத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.

அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று எதிர்வுகூறினேன்

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச | Political Crisis Peoples Protest

கம்மன்பில உட்பட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று மேற்கொண்ட போராட்டத்தின் பிரதிபலனாக அன்று எதிர்க்கட்சிக்கு செய்ய முடியாததை செய்ய முடிந்தது.

அத்துடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று நாங்கள் எதிர்வுகூறியிருந்தோம்.

மிகப் பெரிய யுத்தத்தில் வென்றதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது.

18வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் முடிந்தது.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே 20வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்காது என்று நாங்கள் கூறினோம்.

நாங்கள் கூறியது போலவே நடந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் அரசாங்கம் பதவியில் இருக்காது என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நேரடி ஊடக சந்திப்பொன்றில் கூறினேன்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசாங்கத்திற்கு பொருளாதார முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது. மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் இல்லாமல் போகும்.

மக்கள் வீதியில் இறங்குவார்கள். பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மக்கள் மிகவும் ஆத்திரமடைவார்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் நாடாளுமன்றத்தை கொண்டு நடத்த முடியாமல் போகும் என்று அப்போதே கூறினேன். ஏழு மாதங்களுக்கு இதனை கூறினேன்.

மக்கள் வீதியில் இறங்குவார் என்று அறிந்தே நான் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்தேன்.

அது அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டது. எனினும் அந்த யோசனையை ஆளும் கட்சியை போல், எதிர்க்கட்சியும் நிராகரித்தது. இதற்கிடையில் மக்கள் வீதியில் இறங்கியதால்,பிரச்சினையின் பாரதூரமான தன்மையை அனைவரும் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

எதிர்க்கட்சிகள் நிராகரித்ததால் ரணில் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது:விஜயதாச ராஜபக்ச | Political Crisis Peoples Protest

இது சம்பந்தமாக மூன்று வாரங்கள், அனைத்து கட்சிகளுடனும் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடினோம். பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வந்தால், ஒப்படைப்பீர்களா என்று நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஜனாதிபதி அதற்கு இணங்கினார். ராஜபக்ச குடும்பத்தினரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு நடத்தினோம், ஜனாதிபதி அதற்கு இணங்கினார்.

பிரதமரை நீக்கவும் ஜனாதிபதி இணங்கினார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேலைத்திட்டம் இருந்தால், நான் பிரதமரை நீக்க தயாராக இருக்கின்றேன் என ஜனாதிபதி கூறினார்.

பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். மூன்று வாரங்கள் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை.

சகல கோரிக்கைகளையும் எதிர்க்கட்சி நிராகரித்ததால், இதனால், பிரதமர் பதவியை ஒருவருக்கு கொடுத்து அரசாங்கத்தை அமையுங்கள் என்று எமக்கு ஜனாதிபதியிடம் கூற நேரிட்டது.

இதனடிப்படையில் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்த போது, நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால், பிரதமர் பதவியை ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என ரணில் விக்ரமசிங்க கூறினார் எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, அச்சுவேலி, Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Castrop-Rauxel, Germany, Dorsten, Germany

26 Nov, 2025
மரண அறிவித்தல்

காரைதீவு, பேர்லின், Germany, Southall, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, கிளிநொச்சி

01 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வண்ணார்பண்ணை

30 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

பரிஸ், France, Lieusaint, France

30 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

வடமராட்சி, Arnsberg, Germany

25 Nov, 2025
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US