இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T 56 ரக துப்பாக்கி ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் அதிரடி
படையினர் திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri