இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T 56 ரக துப்பாக்கி ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் அதிரடி
படையினர் திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan