இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T 56 ரக துப்பாக்கி ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் அதிரடி
படையினர் திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri