இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் T 56 ரக துப்பாக்கி ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரவீந்திரன் (46 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை விசேட பொலிஸ் அதிரடி
படையினர் திருகோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri