மோசமான செயலில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜண்ட் பணியிடைநீக்கம்
பொலிஸ் நிலையத்தில் இருந்து பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்வதாக கூறி சென்ற பொலிஸ் சார்ஜண்ட் விடுதியில் ஒரு பெண்ணுடன் இருந்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய சார்ஜென்ட் ஒருவரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வசமாக மாட்டிக் கொண்ட சார்ஜண்ட்
வெலிபென்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில், சோதனைக் கடமைகளுக்காக வெளியேறும் குறிப்புகளைப் பயன்படுத்தி, சார்ஜண்ட் மூன்று அதிகாரிகளுடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சோதனை செய்தபோது, மதுகம பொலிஸ் பிரிவில் அகலவத்த வீதியில் உள்ள விடுதியின் ஒரு அறையில் சார்ஜண்ட் பெண்ணுடன் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தவறான நடத்தைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.