நான் பதவி விலகவில்லை..! புத்திக மனதுங்க வெளியிட்டுள்ள தகவல்
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் பதவி விலகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளியான செய்திகள்
இதன்போது, புத்திக மனதுங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாக தெளிவுபடுத்தினார்.

மேலும், "நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன். தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, நான் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம், பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க பதவி விலகியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri