தப்பியோடிய சந்தேகநபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (Photos)
வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபரொருவர் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த நபரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த முதலாம் திகதி விபத்தினை ஏற்படுத்திய நபரொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தப்பி சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்
குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071-8591343, 024-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி
வவுனியா போக்குவரத்து பொலிஸாருக்கு தகவலை வழங்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



