கொழும்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணித்த போது பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லொறி திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுரைச்சோலையில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறி கொண்டு செல்லும் வேளையில் குறித்த லொறி கொள்ளையிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம்
இந்நிலையில் வெல்லம்பிட்டிய மற்றும் கடுவெல பகுதிகளில் பயணித்த லொறியை சோதனையிட பொலிஸார் மறித்த போதும், அதன் சாரதி தப்பிச் செல்ல முயன்றமையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லொறியின் சக்கரங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு லொறி நிறுத்தப்பட்ட நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சாரதியிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan