இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் புகைப்படத்தை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது.
தகவல்களுக்கு..
இந்த விசாரணையின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடந்த 9 ஆம் திகதி இந்த கொலை இடம்பெற்ற நிலையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் எண்ணை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071-8596408 தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam