தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்! பொரளை மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம்,எதிர்வரும் 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பில் தோண்டி எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கடந்த (19.05.2023 ) திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு
இதனடிப்படையில் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், பொரளை பொது மயானத்தில் அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சடலத்தை தோண்டியெடுக்குமாறு கடந்த 18ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழாம் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
