அவுஸ்திரேலியாவில் சூறா மீன் தாக்கி ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவில் சூறா மீன் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 1963ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு சூறா தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீந்திக் கொண்டிருந்த நபர் ஒருவரை சூறா மீன் கொடூரமாக தாக்கியுள்ளதாகவும் இதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சூறா தாக்கிய போது அதனை நேரில் பார்த்தவர்கள் திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடலுக்கு செல்லும் போது மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
