போதைப் பொருள் வர்த்தகருடன் தொடர்பு! மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
கொழும்பு, மருதானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிசார், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23ம் திகதி மருதானைப் பொலிசார் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.
மூவரும் கைது
அவரிடம் இருந்து 11,320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.
குறித்த போதைப்பொருள் வர்த்தகரின் கையடக்கத் தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது மருதானைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தமையும், குரல் ஒலிப்பதிவுகள் வழியாக உரையாடியிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போதைப் பொருள் வர்த்தகத்துக்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவை இறந்து விட்டதாக தூக்கி வீசி சென்ற இராணுவம்! பின்னர் நடந்த அபூர்வம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 13 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
