எரிவாயுவுக்காக காத்திருந்தவர்கள் மீது அநாகரிகமாக நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரி
மட்டக்களப்பு நகர் பையினியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று (26) அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒரு மணிவரை சிலிண்டர்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்தாவது,
“லிற்ரோ எரிவாயு மாவட்ட பிரதான முகவர்கள் தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு பிரதேச ரீதியாக தினமும் கொழும்பில் இருந்துவருகின்ற எரிவாயுக்களை கடைகளுக்கே அல்லது எரிவாயு முகவர்களுக்கோ வழங்காது நேரடியாக மக்களுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பைனியர் வீதியில் காலை 9 மணிக்கு எரிவாயு விநியோகிக்ப்படும் என முகவர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே எரிவாயு பெற்றுக் கொள்ள முகவர்களால் வழங்கப்பட்ட டோக்கனுடன் ஒருபகுதியினரும் ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் பெற்றுக் கொள்ளாத ஒரு பகுதியினருமாக எரிவாயுவை பெற்றுக் கொள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீதியின் இருபகுதிகளில் இரண்டு வரிசையில் பெண்கள் முதியவா்கள் உட்பட வெற்றுச் சிலிண்டருடன் அதிகாலை 4 மணி தொடக்கம் காத்திருந்தனர்.
எரிவாயு முகவர்கள் எரிவாயு லொறியுடன் காலை 11 மணிக்கு அங்கு சென்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட 300 பேருக்கு மாத்திரம் எரிவாயுவை விநியோகித்ததுடன் டோக்கன் பெறாது காத்திருந்தவர்களுக்கு எரிவாயு இல்லை என பொலிஸ் அதிகாரி தெரிவித்து காத்திருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரி அநாகரிகமாக நடந்து கொண்டார்".
இதனையடுத்து பொலிஸார் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு பொலிஸாருடன்
வாய்தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் எரிவாயுவை பெறாது காத்திருந்து சுமார் 700
க்கும் அதிகமான மக்களுக்கு முகவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை எரிவாயுவை
வழங்குவதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கியதையடுத்து அங்கிருந்து மக்கள் விலகிச்
சென்றனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
