மக்களின் எண்ணத்தை பொலிஸார் மாற்ற வேண்டும் : சந்திரசேகர் அறிவுறுத்து
பொலிஸார் தொடர்பில் பொதுமக்களுக்கு எதிர்மறை நிலைப்பாடே காணப்படுகின்றது அந்த நிலைப்பாட்டையும் மனநிலையையும் பொலிஸார் மாற்ற வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் (R. Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பொலிஸாருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் ஆணையைக் காப்பாற்றும் கடப்பாடு
மேலும் தெரிவித்ததாவது, "வடக்கு மாகாணத்தில் பொலிஸார் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பொதுமக்கள் மத்தியில் பொலிஸாரைப் பற்றி நல்ல நிலைப்பாடு உள்ளதா? என்று கேட்டால் இல்லை என்பதே பதில்.

எனவே, இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் பொலிஸார் இந்த வருடத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். இலங்கை முழுவதும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்தன.
அந்த மக்கள் ஆணையைக் காப்பாற்றும் கடப்பாடு எமக்கு உள்ளது.
இன்று நான் செல்லும் இடங்களிலெல்லாம் வன்முறை, வாள்வெட்டு தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்தி மக்கள் சுமூகமாக வாழ்வதற்கு வழியேற்படுத்தப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri