திருமணத்திற்கு தயாரான இளைஞன் பரிதாபமாக பலி : தென்னிலங்கையில் ஏற்பட்ட துயரம்
காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற வெளிநாட்டவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இளைஞன் பலி
இதன்போது தூக்கியெறியப்பட்ட இளைஞன் எதிரில் வந்த பேருந்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதர பட்டுவத்த, தொடந்துவ பகுதியை சேர்ந்த 25 வயதான சந்தீப் லக்ஷனா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணம்
இரண்டு நாட்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இளைஞன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டவர் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் ஹிக்கடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
