யாழில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் விசேட நடவடிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை கண்காணிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் பொலிஸாரையும் உள்ளடக்கிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்ப்பாண குடா நாட்டின் முக்கிய வீதிகளில் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியில் பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இதேவேளை,யாழ்ப்பாணத்தில் விமானப் படையின் உதவியுடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam