கட்சி தலைவரை கொல்ல சதி: பொலிஸ் விசாரணை ஆரம்பம்
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா, தன்னைப் படுகொலை செய்வதற்கு பிரபலமான பிக்கு ஒருவர் பாதாள உலகக்குழுவொன்றுக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள்
அத்துடன் தான் வசிக்கும் இந்துருவ - கோணகல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு தன்னை படுகொலை செய்ய ஒத்தாசை வழங்கினால் ஐந்து லட்சம் ரூபா தருவதாக குறித்த பிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதன் பேரில் குறித்த பெண்ணும் இன்னொரு இளைஞரும் சேர்ந்து தன்னை படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் முறைப்பாட்டுக்கு ஆதாரமாக ஒலிப்பதிவு ஒன்றையும், புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் கையளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
