பொலிஸ் விசாரணைக்கு பயந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முச்சக்கரவண்டி சாரதி
மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு அஞ்சியே இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதிக்குச் சொந்தமான வீடொன்று தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எரிபொருள் நெருக்கடி: அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை - விடுக்கப்பட்டது எச்சரிக்கை
அச்சத்தில் முடிவு..
அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.

குறித்த பொலிஸ் முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பாக தனது கணவர் மிகுந்த கவலையுடனும் பயத்துடனும் காணப்பட்டார் என்று உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பொலிஸ் விசாரணைக்குச் செல்ல வேண்டியிருந்த அச்சம் காரணமாக அவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.