யாழில் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!
யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் ஊரெழு பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது தலைக்கவசம் இன்றி இருவர் ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
இதன்போது அவர்களை மறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்று தண்டப்பணம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போது பிரச்சினை எல்லை மீறிச்சென்றமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி இருமுறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
