பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் பம்பலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்குபற்றிய போது கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
மேலும், குற்றச் செயல்களை மேற்கொள்வோருடன் தொடர்பு பேணும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் ஹரக் கட்டா எனப்படும் நதுன் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பு பேணிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam