வவுனியா வடக்கு சபை செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு!
வவுனியா வடக்கு பிரதே சபை செயலாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்தமை தொடர்பில சபை அமர்வில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களுக்கு தவிசாளர் அது தொடர்பில் பேச அனுமதி மறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் நேற்று (27) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பொலிஸ் முறைப்பாடு
இதன்போது, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரால் சபை செயலாளருக்கு எதிராக புளியங்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும் வாகன விபத்துக்குரிய அறிக்கை சமர்ப்பிக்காமை தொடர்பிலும் சபை உப தவிசாளர் உட்பட்ட சில ஆளும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் தவிசாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அது தனது செயலாளர் இது தொடர்பில் பதில் அளிக்க முடியாது. உறுப்பினர்களும் இங்கு கேள்வி எழுப்ப முடியாது எனவும் நான் எங்கு என்றாலும் முறையிடுவேன் எனத் தெரிவித்து சபை உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் பேச சந்தர்ப்பம் வழங்காது சபை அமர்வை நன்றி கூறி முடித்து விட்டு தவிசாளர் சென்றதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சபை அமர்பில் எழுந்த எதிர்ப்பு மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியையடுத்து நேற்று (27.05) மாலை விபத்து தொடர்பான தனது அறிக்கையை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபையின் செயலாளிடம் கையளித்திருந்தார்.
குறித்த அறிக்கையை முன்னரே வழங்கியிருந்தால் வாகனம் திருத்தப்பட்டு கடமைகளை தொடர்ந்தும் தடையின்றி செய்திருக்க முடியும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி மறுத்த தவிசாளர்
இதேவேளை, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கட்டக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிகாலை 2.20 மணியவில் தவிசாளர் பயணித்த வாகனத்துடன் மாடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தையடுத்து சேதமடைந்த வாகனத்தை திருத்தம் செய்வதற்காக விபத்து இடம்பெற்று 3 தினங்களுக்குள் பிரதி பிரதம செயலாளர் அவர்களுக்கு சபை செயலாளரால் விபத்து நடந்த இடம், விபத்து விபரம், திருத்தம் செய்ய வேண்டிய மதிப்பீட்டு அறிக்கை, உறுதிப்படுத்திய பொலிசின் அறிக்கை, உறுதிப்படுத்திய காப்புறுதி நிறுவனத்தின் மதிப்பீட்டு பத்திரம், விபத்து தொடர்பில் சாரதியின் அறிக்கை, விபத்து நடைபெற்ற போது குறித்த வாகனத்தை பயன்படுத்திய தவிசாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதனை சபை செயலாளர் கோரிய போது அதனை வழங்க முடியாது என மறுத்து வந்த தவிசாளர், விபத்துக்குள்ளான வாகனத்தை தரவில்லை என புளியங்குளம் பொலிசில் சபை செயலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமையும், அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் செயலாளருக்கு எதிரான முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் மீள பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.